Sunday, August 12, 2012

தோள்சாய்ந்து !!!

உன் தோள்  சாயத்தோன்றும்  போதெல்லாம் சாய்ந்து கொண்டுதான் இருக்கிறேன் ..
நமது  நினைவுகளின்  மேல் !!!

Saturday, August 11, 2012

தடம் !!!



ஈரமாய் இருந்த பொழுது நீ பதித்த கால் தடத்தின் சுவடு
இன்னும் அழியாமல் இருக்கின்றது...
 இறுகியபின்னும்
 இதயத்தில் !!!

Friday, August 10, 2012

நுரை !!!

கடல் எத்தனை வலிமையுள்ளதாய் இருந்தாலும் ...
அலைகள் எத்தனை உயரமாய் நின்றாலும் ...
கரைக்கு ஒதுங்கும் போது 
நுறைகளாய் பிறப்பெடுத்து உன் கால் நனைத்து உடைகின்றன ...
நானும் பெண்ணானேன் !!!


நூலிழை!!!





ஒரே ஒரு நூலை மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்...

அறுத்து விட்டால் பறந்து விடுவாய்...

தொலைந்தும்  விடுவாய் ...

பறந்து போக ஆசைப்படுகிறாய் ...

போகிறபோக்கில் போகட்டும் என விட்டுவிட முடியவில்லை  என்னால் ...

என் சுவாசத்தால் நிறைத்து இருக்கிறேன் உன்னை ... 


- மாயா !